Posts

Showing posts from May, 2026

காட்டாளன் (Kattalan) திரை விமர்சனம்

Image
மலையாள நடிகர் Antony Varghese நடிப்பில், இயக்குநர் Paul George இயக்கியுள்ள காட்டாளன், யானைத் தந்தக் கடத்தல், கும்பல் மோதல்கள் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அதிரடி குற்றத் திரைப்படம்.  கதை தந்தக் கடத்தல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் இரு கும்பல்களுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் நாயகன் அன்டனியின் பயணமே படத்தின் மையம். காடு, கடத்தல், வன்முறை, துரோகம் என வேகமாக நகரும் திரைக்கதை, இடையிடையே பல கதாபாத்திரங்களின் பின்னணிகளையும் இணைக்க முயல்கிறது.  பலம் Ravi Basrur வழங்கிய பின்னணி இசை படம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு தரம் மிகச் சிறப்பாக உள்ளது. சில சண்டைக் காட்சிகள் திரையரங்கில் ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. அன்டனி வர்கீஸின் திரைநிலை மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் தீவிரம் ரசிகர்களைக் கவர்கிறது.  பலவீனம் கதாபாத்திர வளர்ச்சி மற்றும் உணர்ச்சி ஆழம் குறைவாக உள்ளது. திரைக்கதை புதுமையை வழங்காமல், ஏற்கனவே பார்த்த பல கேங்ஸ்டர் படங்களின் கலவையாகத் தோன்றுகிறது. ஸ்டைல் மற்றும் ஸ்லோ மோஷன் காட...

பிளாஸ்ட் - திரை விமர்சனம்

Image
கராத்தே மாஸ்டரானா அர்ஜுன் தன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதிலே கராத்தே சொல்லித்தருகிறார். மேலும் நம் எதிரில் யார் பாதிக்கப்பட்டாலும் தட்டிக்கேட்கணும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார். அதை வேதவாக்காக எடுத்து வளரும் ப்ரீத்தி தவறு யார் செய்தாலும் போட்டுப்பொளக்கிறார். அம்மாவான அபிராமிக்கு இதில் உடன்பாடில்லை. இவர்கள் பேமிலி ட்ராவல் இப்படிச்செல்ல, இன்னொரு பக்கம் 7000 கோடி ரூபாய் லாபத்திற்காக ஒரு மலைக்கிராமத்தையே சூறையாடும் வேலையில் இறங்குகிறார் வில்லன். அந்த வில்லன் டீமிலுள்ள ஒருவருக்கும், அர்ஜுன் மகளுக்கும் ஒரு பஞ்சாயத்து வருகிறது. அது அப்படியே தொட்டுத்தொட்டு பெரிதாக வளர, முடிவில் அர்ஜுன் பேமிலி எடுத்த ஆக்சன் அவதாரம் என்னவானது? என்பதாக படத்தின் திரைக்கதை தடதடக்கிறது அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி மூவரும் நடிப்பதை விட, அடிப்பதை தான் அடிப்படையாகச் செய்துள்ளனர். மூவரும் ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளனர். ப்ரீத்தி முகந்தன் போட்டுள்ள எபெக்ட் அட சொல்ல வைக்கிறது. 40 வயதை கடந்த அபிராமி காட்டியுள்ள ஆக்சன்லாம் வேறரகம். இந்தப்பேமிலியில் ஒருவராக வரும் விவேக் பிரசன்னாவும் மி...

உலகின் முதல் ரோபோடிக் ‘VEIL’ அறுவை சிகிச்சை: சென்னை அப்போலோ மருத்துவமனை புதிய சாதனை

Image
சென்னை, மே 27:  ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி வகிக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனை, உலகிலேயே முதன்முறையாக ஹியூகோ ரோபோடிக்-அசிஸ்டெட் சர்ஜரி (RAS) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக வீடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி (VEIL) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு மருத்துவ உலகில் புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை 40 வயதுடைய ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்தவித பெரிய பக்கவிளைவுகளும் இன்றி நோயாளி மிக விரைவாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆண்குறி, பெண்குறி வெளிப்பகுதி மற்றும் யோனி போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் இடுப்பு இடுக்குகளில் உள்ள நிணநீர்முடிச்சுகளுக்குப் பரவும்போது, இங்வினல் நிணநீர்முடிச்சு அகற்றும் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இதுவரை இந்த சிகிச்சை பெரும்பாலும் பெரிய கீறல்களுடன் திறந்தநிலை அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் சரும சேதம், காயம் ஆறுவதில் தாமதம் மற்றும் நிணநீர் கசிவு போன்ற சிக்கல...

உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டுவிழாவில் கங்கை அமரன் அனல் பறக்க பேச்சு

Image
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டெயின்மெண்ட் சார்பில், தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு தயாரிப்பில் உருவாகியுள்ள “உறவுகள்” திரைப்படத்தின் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னை நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், இசையமைப்பாளர்கள் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன் ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கங்கை அமரன் கூறியதாவது: “தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களின் நல்ல எண்ணமே இந்த படைப்பின் முக்கிய பலம். அருமையான சமூக உறவுகளை மையமாகக் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடிகர்களை உருவாக்கி ஒரு புதிய கதையை வழங்கியுள்ளார். எங்கள் அண்ணன் இளையராஜா அவர்களின் இசையில்தான் நாங்கள் பலரும் வளர்ந்தோம். எங்கள் குழந்தைகளையும் அவரிடமே இசை கற்க அனுப்புவோம். அப்படிப்பட்ட குருமார்களுடன் வளர்ந்தது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். ஆனால் இன்றைய தலைமுறைக்கு அது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு பாடலை முழுமையாக உணர்ந்து பாடுவோம். இன்று ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக பதிவு செய்து, AI-இல் feed செய்து பாடல்க...