மாமன் திரைப்பட விமர்சனம்
சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய மாமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது? வாங்க, பார்க்கலாம்! கதை என்ன? சூரியின் அக்கா ஸ்வாசிகாவுக்கு 10 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு முதல் முறையாக ஆண் குழந்தை பிறக்கிறது. இதனால் சந்தோஷமடையும் சூரி, தனது மருமகனை அளவுக்கு அதிகமாக பாசத்தோடு பார்த்துக்கொள்கிறார். காலையில் குளிப்பாட்டுவது முதல் இரவு தூங்க வைப்பது வரை, பெற்றோர்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சூரியே செய்கிறார். இதனால், அந்தக் குழந்தை மாமனை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டேன் என்று இருக்கிறது. இந்த நிலையில், சூரிக்கு ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணம் நடக்கிறது. ஆனால், திருமணத்துக்குப் பிறகும் குழந்தை சூரியை விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. முதலில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஐஸ்வர்யா, பின்னர் இதனால் வருத்தப்படத் தொடங்குகிறார். இதனால் சூரிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பெரிய பிரச்சனை உருவாகி, குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இந்த உறவுகள் மீண்டும் இணைந்தனவா? அதுதான் படத்தின் மீதிக்கதை. படம் எப்படி இர...