Posts

​மீண்டும் ஒரு 'செல்லமே' மேஜிக்? இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் 'பிரேக்பாஸ்ட்' டீசர் வெளியீடு!

Image
​சென்னை:  'செல்லமே' மற்றும் 'ஆனந்த தாண்டவம்' போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் Ar. காந்தி கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ என்ற அழகான காதல் காவியத்துடன் மீண்டும் களமிறங்கியுள்ளார். ​இதமான டீசர்: ரீமா சென் வெளியீடு Teaser link  👈 ​இந்தக் கடும் கோடை வெயிலுக்கு இதமான தென்றலைத் தருவது போல, மனதை வருடும் மென்மையான காதல் உணர்வுகளோடு வெளியாகியுள்ளது இப்படத்தின் டீசர். நடிகை ரீமா சென் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 'செல்லமே' படத்தில் இயக்குநர்-நடிகை கூட்டணியாகப் பணியாற்றிய இவர்கள், மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​வசனங்களை விட காட்சிக்கு முக்கியத்துவம் ​வழக்கமான அதிரடி பாணி படங்களுக்கு மத்தியில், இந்தப் படத்தின் டீசரில் வசனங்களை விட காட்சி அமைப்புகளுக்கு (Visuals) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்களின் கண் அசைவுகளும், பின்னணி இசையும் படத்தின் ஆழமான காதலைப் பறைசாற்றுகின்றன. இது விமர்சகர்...

பைக்கர் - விமர்சனம்

Image
ப்ளாஸ்பேக் 1994-ல் நடக்கிறது.) பெரும் பைக்ரேஸ் சாம்பியனான ராஜசேகர் தன் மகன் சர்வானந்திடம் இருக்கும் ரேஸ் திறமையை கண்டெடுத்து வளர்த்தெடுக்கிறார். வேறு எதிலும் கவனம் செல்ல விடாமல் அவரை கண்டிப்புடன் வளர்க்கிறார் ராஜசேகர். ஆனால் சர்வானந்த் திறமையான ரேஸராக இருந்தாலும் ஒருபுறம் மாளவிகா நாயரோடு காதலும் கொள்கிறார். முக்கியமான பைக்ரேஸ் வெளிநாட்டில் நடக்கும் போது ராஜசேகருக்கு தெரியாமல் சர்வானந்த் தன் காதல் மனைவிக்காக வந்துவிடுகிறார். மேலும் சர்வானந்த் திருமணம் முடித்ததும் ராஜசேகருக்குத் தெரியாது. இடி விழுந்தாற்போல் நொறுங்கி விடுகிறார் ராஜசேகர். சர்வானந்த் அதன்பின் வேறு தொழிலில் கவனம் செலுத்துகிறார். ஒரு கட்டத்தில் தன் தந்தையின் அன்பைப் பெறவும், தந்தையின் கனவை நிறைவேற்றவும் மீண்டும் ரேஸராக களம் காண்கிறார் சர்வானந்த். களத்தில் எப்படி அவர் வெல்கிறார் என்பதே மீதிக்கதை பைக் ரேஸர் ரோலுக்காக தன் உடல் எடையை 17 கிலோ குறைத்துள்ளார் சர்வானந்த். அவரின் பேருழைப்பு படத்தில் பக்காவாக தெரிகிறது. எமோஷ்னல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார் சர்வானந்த். ராஜசேகர் மற்றொரு ஹீரோவே தான். பேரன் வருகைக்குப் பிறக...

கார்மேனி செல்வம் - திரை விமர்சனம்

Image
கார் டிரைவராக தன் மனைவி மகனோடு எளிமையான வாழ்வை வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி நாமும் பணக்கார வாழ்வை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆசையின் அளவில் எதார்த்தம் நிறைந்திருந்தால் பெருந்துன்பம் நேராது. ஆசையின் அளவு எதார்தத்தை மிஞ்சும் போது வாழ்வும் நம்மை சூனியமாக்கி விடுகிறது. தன் தேவைகளைப் பற்றி யோசிக்காமல், தன் ஆசைகளை நோக்கிப்பயணப்படுகிறார் சமுத்திரக்கனி. அதனால் கடன்களை வாங்கிக்குவிக்கிறார். அதுவே அவர் வாழ்வில் சிக்கலாக மாறுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை சில கேரக்டர்களுக்கு இவரை விட்டால் வேற ஆளில்லை என்போம் அல்லவா! அந்த கேட்டகிரியிலுள்ள நடிகர் சமுத்திரக்கனி. அப்படியான சாமுத்திரிகா லட்சணத்தோடு இக்கேரக்டரில் நடித்து சிறப்பு செய்துள்ளார். அவரது மனைவியாக வரும் லெட்சுமி பிரியா சந்திரமெளலி அழகாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தலைவியின் மனநிலையை நம் கண்முன் நிறுத்தியுள்ளார். கரன் சக்ரவர்த்தி, கெளதம் வாசுதேவ் மேனென், அபிநயா உள்ளிட்ட ஏனைய கேரக்டர்களும் படத்தின் பில்லர்களாக உதவியுள்ளனர் இசை படத்தின் ஆன்மாவாக ஆங்காங்கே ஒலித்துள்ளது. இசை பொறுப்பை Music as a serv...

லீடர் - திரைவிமர்சனம்

Image
லீடர் லெஜண்ட் நடித்த விஜய் படம்” எனச்சொல்லும் படி ஒரு தெறி சம்பவத்தை செய்துள்ளனர் இயக்குநர் துரை செந்தில்குமாரும், லெஜண்ட் சரவணனும் தூத்துக்குடி ஹார்பரிலிருந்து சர்வீஸுக்காக வரும் கார்களை ரிப்பேர் செய்து கொடுக்கும் வேலை செய்கிறார் ஹீரோ சரவணன். அவருக்கு செவித்திறன் குறைபாடுள்ள ஒரு மகள். மகள் என்றால் அவருக்கு உயிர். ஒருபுறம் தூத்துக்குடி ஹார்பரில் கண்டெய்னர் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தலான ஒரு பொருளை கடத்த திட்டுமிட்டுள்ளது வில்லன் சந்தோஷ்பிரதாப் டீம்! சாதா மெக்கானிக், எப்படி இம்மாம் பெரிய ட்ராபுக்குள் செல்கிறார் என்பதும், அப்படிச் சென்றபின் அவர் யாராக இருக்கிறார் என்பதும் தான் லீடரின் மீதி திரைக்கதை கதாநாயகனாக லெஜண்ட் படத்தில் அறிமுகமான சரவணன், இந்தப்படத்தில் கதையின் நாயகனாக வந்துள்ளார். சிற்சில எமோஷ்னல் காட்சிகளில் கூட குறை தெரியாதபடி நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகளில் நிஜமாகவே அதகளம் செய்துள்ளார். ஆண்ட்ரியா கேரக்டர் வலுவாக எழுதப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக நடித்துள்ளார். ஷாம் நல்ல ரோலில் பரிணமித்துள்ளார். சந்தோஷ் பிரதாப் பெரிய கேரக்டரைச் சரியாகச்செய்து ஸ்கோர் வாங்கியுள்ளார்....

காளிதாஸ் 2 - விமர்சனம்

Image
சில ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு படம் மீது துளியும் எதிர்பார்ப்பில்லை. ஆனால் படம் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்தது. பெரிய வெற்றியும் பெற்றது. இப்போது காளிதாஸ் 2 நல்ல எதிர்பார்ப்போடு வந்துள்ளது. மெடிக்கல் மிராக்கிளாக இரண்டாம் பாகமும் ஆடியன்ஸை ஈர்க்கும் தன்மையோடு வந்திருக்கிறது. படக்குழுவிற்கு நம் வாழ்த்துகள். துப்பறியும் படங்களுக்கு கதை என்பது ஒரேயொரு சம்பவமாக இருந்தால் போதும். திரைக்கதை தான் பெரும் சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் இந்தப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த் அப்படியான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார் சென்னையின் புறநகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு வயது குழந்தை மிஸ்ஸிங். அதை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் பரத். ம்ற்றொரு அதிகாரியான பவானி ஸ்ரீயும் விசாரிக்கிறார். மிஸ் ஆன குழந்தை இறந்தும் விட காவல்துறை பரபரக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளில் ஒருவரான அஜய் கார்த்தி மீது காவல்துறையின் சந்தேகப்பார்வை விழுகிறது. அவரை நீதிமன்றம் இழுத்துச்செல்லும் போது பிரகாஷ்ராஜ் அவரை காப்பாற்றி விடுகிறார். அதன்பின் இன்னொரு குழந்தை காணாம...

நீளிரா - விமர்சனம்

Image
வரலாற்றில் கொஞ்சமாக கதை இருக்கலாம். ஆனால் கதை மொத்தமும் வரலாறாக இருந்துவிடக்கூடாது. சின்னதாக அப்படியொரு பதட்ட எண்ணத்தை தந்தது நீளிரா. ஆனால் போர் குறித்த எளியவர்களின் மனநிலையை பிரதிபலித்த இப்படத்தை நாம் பார்த்தே ஆகவேண்டும் இலங்கையிலுள்ள விடுதலை இயக்கத்தை சிதைக்க, இந்திய அரசு அமைதிப்படையை அங்கு அனுப்பியது. அந்த அமைதிப்படை ஒருபுறம், விடுதலை இயக்கம் ஒரு புறம், சிங்கள படை ஒருபுறம் என தத்தம் தங்கள் நியாயங்களில் நிற்கிறார்கள். இச்சூழலில் அங்கு, ஒரு எளிய குடும்பத்தின் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. ஒரு இரவுக்குள் இந்த திருமணம் எந்தச்சுழலில் சிக்கியது… இல்லை எப்படி தப்பியது? என்பதே நீளிரா படத்தின் கதை. (நீளிரா என்றால் நீண்ட இரவு என பொருள்) இந்திய அமைதிப்படை பிரிவின் தலைமைப்பாத்திரத்தில் நவீன் சந்திரா. நல்லவராக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். போராளி இனக்குழுவின் அங்கமாக சனந்த் இவரின் நடிப்பும் நல்ல மைலேஜ். மேலும் கபிலவேணு, ரூபா கொடுவாயூர், விது, சித்து குமரேசன், நவயுகா, ஸ்வாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிபிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் உள்பட யாவரும் நல்ல நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளன...