தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் ‘நரிவேட்டை’ – மே 23 முதல் திரையரங்குகளில்!
டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம், மே 23, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனம் A.G.S. எண்டர்டெயின்மெண்ட், தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.
உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தத் திரைப்படம், வெளியானதுமே பேசப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அபின் ஜோசப் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.
இத்திரைப்படத்தில் டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சராமூடு, மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குநர் சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
132 நிமிடங்கள் ஓடும் ‘நரிவேட்டை’, தனது சுருக்கமான படத்தொகுப்பு, அதிரடி பின்னணி இசை (ஜேக்ஸ் பிஜாய்), அழுத்தமான கதை, தரமான ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிப்பின் மூலம், பார்வையாளர்களுக்கு சுவாரசியமான திரை அனுபவத்தை அளிக்கவுள்ளது.
இந்தியன் சினிமா கம்பெனியின் சார்பில் திப்பு ஷா மற்றும் ஷியாஸ் ஹாசன் தயாரித்துள்ள இந்த படம், ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments
Post a Comment