ராயல் சல்யூட் - திரைவிமர்சனம்


‘ராயல் சல்யூட்’ – மனிதநேயத்தை மையமாகக் கொண்ட போர் கதை

மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரிப்பில், ஜெய் சிவ சே இயக்கத்தில் வெளிவந்துள்ள ராயல் சல்யூட் திரைப்படத்தில் பிரதீப், அர்ச்சனா சிங், யுவா யுவராஜ், சுபாஷ் சிம்பு, அமரன் எம்.ஜி.ஆர், இன்பா, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தியா–பாகிஸ்தான் போரின் நடுவே காயமடைந்த மேஜர் யுவா யுவராஜை மீட்க முயலும் ராணுவ வீரர் பிரதீப் தான் கதையின் மையம். நண்பனை காப்பாற்ற முடியாது என்று விட்டு செல்வதும், பின்னர் மனசாட்சியின் குரல் வழியாக மீண்டும் திரும்புவதும், அதற்குப் பிறகு மேஜரின் தியாகமும், இறுதியில் பாகிஸ்தான் வீரர் (சுபாஷ் சிம்பு) வருகையால் திருப்பமடையும் கதை சுவாரஸ்யமாக விரிகிறது.

பிரதீப் உண்மையான இராணுவ வீரரைப் போல கம்பீரமாக நடித்திருக்கிறார். அர்ச்சனா சிங் தனது வேடத்தை இயல்பாகக் கையாண்டுள்ளார். யுவா யுவராஜ், சுபாஷ் சிம்பு உள்ளிட்டோர் தங்களுக்கான வேடங்களில் சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

ஜெய் கிஷான் இசையமைப்பு, கணேஷ் முத்தையா ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. இயக்குனர் ஜெய் சிவ சே, போரின் பின்னணியில் கூட மனிதநேயம் தான் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில்: ராயல் சல்யூட் – நல்ல கருத்து இருந்தாலும் கதை சொல்லும் விதத்தில் பல இடங்களில் பலவீனம்.

மதிப்பீடு:  (2. 5/5)

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்